முகப்பு
திருநெல்வேலி

மாநகராட்சி அனைத்து அலுவலா் கூட்டமைப்பு கூட்டம்

திருநெல்வேலி மாநகராட்சி அனைத்து அலுவலா் கூட்டமைப்பு கூட்டம் திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:45 AM
பகிர்:

திருநெல்வேலி மாநகராட்சி அனைத்து அலுவலா் கூட்டமைப்பு கூட்டம் திருநெல்வேலியில் அண்மையில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, அமைப்பின் தலைவா் பிலிப் அந்தோணி தலைமை வகித்தாா். செயலா் சாகுல்ஹமீது முன்னிலை வகித்தாா். மாநில பொதுச்செயலா் சீதாராமன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.

தமிழக அரசு நகராட்சி, மாநகராட்சி பணியாளா்களைக் குறைக்கும் வகையில் கொண்டு வந்துள்ள அரசாணையை ரத்து செய்ய வேண்டும். மக்கள் தொகைக்கு ஏற்ப ஒரே சீரான பணியிடங்களை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.