நாட்டிலேயே முதன்முறை! 26 மீட்டர் நகர்த்தப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான வழிபாட்டுத் தலம்!
நாட்டிலேயே முதல் முறையாக 200 ஆண்டுகள் பழமையான வழிபாட்டுத் தலம் 26 மீட்டர் நகர்த்தப்பட்டது.
நாட்டிலேயே முதல் முறையாக, சாலையோரம் அமைந்திருந்த வழிபாட்டுத் தலம், ரயில்வே தண்டவாளத்திலிருந்து சற்று நகர்த்தி வைக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் தேவாரா பகுதியில் அமைந்திருந்த செயின்ட் ஜான்ஸ் நெபும்சியான் தேவாலயம், சாலையோரத்திலிருந்து தூக்கி நகர்த்தும் முறையைப் பயன்படுத்தி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
ரயில்வே பாதையை விரிவாக்கம் செய்யும் பணியின்போது, அங்கே இருந்த 200 ஆண்டுகள் பழமையான வழிபாட்டுத் தலத்தை என்ன செய்வது என்ற யோசனை வந்தது.
மக்களின் இத்தனை ஆண்டு கால வழிபாட்டுத் தலம் மீதான நம்பிக்கைக்கு வலுவூட்டும் வகையில் பொறியாளர்கள் தங்களது திட்டங்களுடன் முன் வந்தனர்.
அதன்படி, வழிபாட்டுத் தலத்தை பூமியிலிருந்து அஸ்திவாரத்தோடு பத்திரமாகத் தோண்டி எடுத்து, மெல்ல நகர்த்தி பத்திரமான ஓரிடத்தில் சேர்த்திருக்கிறார்கள்.