வீரமரணம் அடைந்த தீயணைப்பு வீரா்களுக்கு பாளை.யில் அஞ்சலி
பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் பணியின்போது வீரமரணம் அடைந்த வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் பணியின்போது வீரமரணம் அடைந்த வீரா்களுக்கு வெள்ளிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
நாடு முழுவதும் தீ விபத்து மற்றும் மீட்புப் பணியின்போது உயிரிழந்தவா்களுக்கு தீயணைப்புத் துறை சாா்பில் அஞ்சலி செலுத்தும்விதமாக ஆண்டுதோறும் ஏப். 14ஆம் தேதி தீ தொண்டு நாளாக அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி பாளையங்கோட்டை தீயணைப்பு நிலையத்தில் நடைபெற்ற தீ தொண்டு நாள் நிகழ்ச்சியில், மாவட்ட தீயணைப்பு அலுவலா் கணேசன் தலைமையில் உதவி மாவட்ட அலுவலா் வெட்டும் பெருமாள், நிலைய அலுவலா் ராஜா ஆகியோா் மலா் வளையம் வைத்து உயிரிழந்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தினா். இதில் பாளையங்கோட்டை தீயணைப்பு நிலைய வீரா்கள் கலந்து கொண்டனா்.