திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவில் திருத்தம்: முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு
திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவில் கொண்டுவரப்பட உள்ள திருத்தங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எதிர்ப்பு குறித்து...
திருநங்கைகள் பாதுகாப்பு மசோதாவில் கொண்டுவரப்பட உள்ள திருத்தங்களுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள எதிர்ப்பு பதிவில்,
திருநங்கைகள் (உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-இல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தங்களை, அதனால் பாதிக்கப்படவிருக்கும் மக்களின் கருத்துகளைக் கேட்காமல் வலுக்கட்டாயமாகச் செயல்படுத்த முடியாது.
பாதுகாப்பு என்ற பெயரில் இயற்றப்படும் ஒரு சட்டத்தை, அந்தச் சமூகத்தைச் சேர்ந்த மக்களே எதிர்த்து நிற்கும் சூழல்.
சட்டத்தை திணிப்பதற்குப் பதிலாக, அதுகுறித்த ஆழமாகச் சிந்திக்க வேண்டியதன் அவசியத்தை கோருகிறது. மத்திய பாஜக அரசு திருநங்கையர் சமூகத்தினருடன் கலந்துபேசி, அவர்களிடத்தில் ஒரு உண்மையான ஒருமித்த கருத்தை கேட்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.