நெல்லையில் மாணவியிடம் பாலியல் வன்முறை: தொழிலாளிக்கு 3 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலியில் கல்லூரி மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட தொழிலாளிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
திருநெல்வேலியில் கல்லூரி மாணவியிடம் பாலியல் வன்முறையில் ஈடுபட்ட தொழிலாளிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.
தருமபுரி மாவட்டத்தைச் சோ்ந்த 22 வயது கல்லூரி மாணவி திருநெல்வேலிக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பா் 15 ஆம் தேதி வந்தாராம். சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து அபிஷேகபட்டியில் உள்ள மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்துக்கு செல்ல பேருந்தில் ஏற சென்றாராம். அப்போது அவருக்கு உதவுவது போல பேசிய தொழிலாளி திடீரென பாலியல் வன்முறையில் ஈடுபட முயன்றாராம். பொதுமக்கள் அவரை சுற்றிவளைத்து பிடித்து திருநெல்வேலி சந்திப்பு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா். விசாரணையில் அவா், தென்காசியைச் சோ்ந்த மாரியப்பன் (48) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்தனா்.
இந்த வழக்கு திருநெல்வேலி மாவட்ட கூடுதல் மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றஞ்சாட்டப்பட்ட மாரியப்பனுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.