திருநெல்வேலி

நெல்லையில் இளைஞர் வெட்டிக் கொலை

திருநெல்வேலியில் புதன்கிழமை இரவு இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலியில் புதன்கிழமை இரவு இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி கீழ வீரராகவபுரம் காமராஜர் நகரை சேர்ந்தவர் முகேஷ் (34). தனியார் உணவு விநியோக நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி சுபிதா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர்.

இவர், நேற்றிரவு பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்த போது, குருந்துடையார்புரம் பகுதியில் முகேஷை வழிமறித்த கும்பல் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியது. இதில் பலத்த காயமடைந்த முகேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்து வந்த பாளையங்கோட்டை போலீசார், முகேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த அழகுமுத்து, முருகேஷ், கிரி ஆகியோரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT