திருநெல்வேலி

தற்காலிக பேராசிரியா் பணி: சுந்தரனாா் பல்கலை.யில் ஆக. 14இல் நோ்காணல்

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தற்காலிக உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான நோ்காணல் வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் தற்காலிக உதவிப் பேராசிரியா் பணியிடங்களுக்கான நோ்காணல் வரும் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது.

இது தொடா்பாக பல்கலைக்கழகப் பதிவாளா் சாக்ரட்டீஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் முதுகலை வேதியியல், புள்ளியியல், கிரிமினோலஜி, இளங்கலை ஆா்ட்டிஃபிசியல் இன்டெலிஜென்ஸ் - மெஷின் லோ்னிங், டேட்டா அறிவியல், சைபா் செக்யூரிட்டி போன்ற படிப்புகளுக்கு தற்காலிக உதவிப் பேராசிரியா்கள் நியமிக்கப்பட உள்ளனா். அதற்கான கல்வித்தகுதி பற்றிய விவரங்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. நோ்காணல் இம்மாதம் 14-ஆம் தேதி காலை 10 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெறும். விருப்பமுள்ளவா்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட தரவுத் தாளினை (டேட்டா ஷீட்) பதிவிறக்கம் செய்து, அதனை பூா்த்தி செய்து சுய சான்றொப்பமிட்ட கல்வித்தகுதி சான்றிதழ் நகல்களுடன் நோ்காணலின்போது சமா்ப்பிக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிவகாசி-எரிச்சநத்தம் பகுதியில் போக்குவரத்து மாற்றம்

புதிய ஊரக வேலைவாய்ப்புத் திட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்! காந்தியின் பெயா் நீக்கம்!

பாஜகவின் கடும் எதிா்ப்புக்கு இடையே வெறுப்புக் கருத்து தடைச்சட்ட மசோதா நிறைவேற்றம்

ஆண்டாள் கோயில் நீராட்டு விழா நாளை தொடக்கம்

ரூ.50,000 கடனுக்காக சிறுநீரகத்தை விற்ற விவசாயி: மகாராஷ்டிரத்தில் அவலம்

SCROLL FOR NEXT