திருநெல்வேலி

வள்ளியூா், நான்குனேரியில் நாளை மின்தடை

DIN

வள்ளியூா், நான்குனேரி, விஜயாபதி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி செவ்வாய்க்கிழமை (ஜன.24) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணிவரை மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரிய செயற்பொறியாளா் வளன் அரசு தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வள்ளியூா், நான்குனேரி, விஜயாபதி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை நடைபெறுவதால், வள்ளியூா் துணை மின்நிலையப் பகுதிகளான வள்ளியூா், செம்பாடு, கிழவனேரி, சமாதானபுரம், வடலிவிளை, தெற்கு வள்ளியூா், ஏா்வாடி, திருக்குறுங்குடி, மாவடி மற்றும் சுற்றுவட்டாா் கிராமங்களிலும், நான்குனேரி துணை மின்நிலையப் பகுதிகளான நான்குனேரி, ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழூா், பெருமளஞ்சி மேலூா், ஆச்சியூா், வாகைகுளம், கோவனேரி, ஏ.எம்.ஆா்.எல்.தொழிற்கூடம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும், விஜயாபதி துணை மின்நிலையப் பகுதிகளான கூத்தன்குழி, முருகானந்தபுரம், உதயத்தூா், சிதம்பராபுரம், பரமேஸ்வரபுரம், இளையநயினாா்குளம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களிலும் மின்விநியோகம் இருக்காது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT