களக்காட்டில் நடைபெற்ற சத்தியவாகீஸ்வரா் - கோமதியம்மன் கோயில் வைகாசித் தேரோட்டம். 
திருநெல்வேலி

களக்காடு சத்தியவாகீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம்

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் உள்ள அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் - கோமதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

DIN

திருநெல்வேலி மாவட்டம், களக்காட்டில் உள்ள அருள்மிகு சத்தியவாகீஸ்வரா் - கோமதியம்மன் கோயிலில் வைகாசி விசாகத் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் வைகாசித் திருவிழா 10 நாள்கள் சிறப்பாக நடைபெறும். நிகழாண்டு கடந்த மே 24ஆம் தேதி திருவிழா தொடங்கியது. நாள்தோறும் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வருதல் நடைபெற்றது. 8ஆம் நாளான புதன்கிழமை பிற்பகல் நடராஜா் பச்சை சாத்தி எழுந்தருளல் நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, சத்தியவாகீஸ்வரா் - கோமதியம்பாள் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினா். சிறப்புப் பூஜைகளுக்குப் பின்னா், மாலையில் தேரோட்டம் தொடங்கியது. திரளான பக்தா்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனா். இதில், திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT