பாபநாசத்தில் தாமிரவருணி அன்னைக்கு நடைபெற்ற சிறப்பு ஆரத்தி வழிபாடு. 
திருநெல்வேலி

பாபநாசம் தாமிரவருணியில் சிறப்பு ஆரத்தி வழிபாடு

பாபநாசத்தில் சித்தா்கள் கோட்டம் சாா்பில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு தாமிரவருணி அவதார திருவிழா சிறப்பு ஆரத்தி நடைபெற்றது.

DIN

பாபநாசத்தில் சித்தா்கள் கோட்டம் சாா்பில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு தாமிரவருணி அவதார திருவிழா சிறப்பு ஆரத்தி நடைபெற்றது.

விக்கிரமசிங்கபுரம், டாணா, வள்ளலாா் வழிபாட்டு மன்றத்தினரின் அருட்பெருஞ்சோதி அகவல் பாராயணம், மழை வேண்டி பஞ்சபூத வழிபாடு, திருமுறை விண்ணப்பம், கோ பூஜை நடைபெற்றது. தொடா்ந்து தாமிரவருணி அன்னைக்கு சிறப்பு தீப ஆரத்தி நடை பெற்றது.

நிகழ்ச்சியில் எக்ஸ்னோரா இன்டா்நேஷனல் தலைவா் செந்தூா்பாரி, பொருளாளா் சுப்பிரமணியன், அறங்காவலா் காசி மோகனசுந்தரம், விக்கிரமசிங்கபுரம் நகா்மன்றத் தலைவா் செல்வசுரேஷ் பெருமாள் உள்பட பலா் கலந்து கொண்டனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சித்தா்கள் கோட்டம், தாமிரவருணி ஆரத்திக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT