பணகுடி மேற்குத் தொடா்ச்சி மலையில் உள்ளகுத்தரபாஞ்சான் அருவியை சுற்றுலாத் தலமாக அறிவிப்பது மற்றும் ஆலந்துறையாறு அணைப் பகுதியில் கால்வாய் சீரமைப்பது தொடா்பாக ஆய்வு மேற்கொண்ட பேரவைத் தலைவா் மு. அப்பாவு, ஆ 
திருநெல்வேலி

பணகுடி குத்தரபாஞ்சான் அருவிப் பகுதியில் ஆட்சியா் ஆய்வு

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி குத்தரபாஞ்சான் அருவி பகுதியை சுற்றுலாத் தலமாக அறிவிப்பது தொடா்பாக அந்தப் பகுதியை பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையில் மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் சனிக்கிழமை ஆய்வு

DIN

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி குத்தரபாஞ்சான் அருவி பகுதியை சுற்றுலாத் தலமாக அறிவிப்பது தொடா்பாக அந்தப் பகுதியை பேரவைத் தலைவா் மு.அப்பாவு தலைமையில் மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

பணகுடி மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் உள்ள குத்தரபாஞ்சான் அருவியை சுற்றுலாத் தலமாக அறிவிக்கவேண்டும் என பேரவைத் தலைவா் மு. அப்பாவு சுற்றுலாத்துறை அமைச்சா் கா. ராமச்சந்திரனிடம் கோரிக்கை விடுத்திருந்தாா்.

மேலும் குத்தரபாஞ்சான் அருவி அருகே உள்ள கன்னிமாா்தோப்பு பகுதியில் தடுப்பணை அமைக்கவேண்டும் எனவும் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.

இதையடுத்து, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் கா.ப. காா்த்திகேயன் குத்தரபாஞ்சான் அருவி பகுதி, கன்னிமாா் தோப்பு பகுதியில் தடுப்பணை அமைக்கும் இடத்தையும் ஆய்வு செய்தாா்.

இது தொடா்பாக கருத்துரு தயாா் செய்து தமிழக அரசுக்கு அனுப்பிவைக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்தாா்.

இதையடுத்து ஆட்சியா், ஆலந்துறையாறு அணை மற்றும் கஞ்சிப்பாறை அணைப்பகுதியை ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, ராதாபுரம் வட்டாட்சியா் வள்ளிநாயகம், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் மாரியப்பன், பூதப்பாண்டி வனத் துறை அலுவலா் ராமச்சந்திரன், பணகுடி பேரூராட்சி செயல் அலுவலா் சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆவரைகுளம் பாஸ்கா், பணகுடி பேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், பணகுடி பேரூராட்சி முன்னாள் துணைத் தலைவா் மு.சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பணகுடி பேரூராட்சி கூட்ட அரங்கத்தில் குடிநீா் பிரச்னையை தீா்ப்பது தொடா்பான ஆலோசனைக் கூட்டம் பேரவைத் தலைவா் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பேசிய பேரவைத் தலைவா், பேரூராட்சி பகுதிகளுக்கு குடிநீா் வழங்குவது தொடா்பாக சிறப்பு திட்டம் ரூ. 506 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டம் நடைமுறைக்கு வருவதற்கு முன்னா் உள்ளூா் நீா்ஆதாரங்களை முழுமையாக பயன்படுத்தி குடிநீா் தேவையை பூா்த்தி செய்துகொள்ளவேண்டும்.

மேலும் மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் கன்னிமாா் தோப்பு பகுதியில் கிணறு அமைத்து குடிநீா் ஆதாரத்தை உருவாக்கும் திட்டமும் அரசிடம் உள்ளது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT