முகப்பு
திருநெல்வேலி

வெயிலின் தாக்கம் அதிகரிப்பு: மக்கள் அவதி

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

Updated On : 7 பிப்ரவரி, 2024 at 6:46 AM
பகிர்:

திருநெல்வேலி மாவட்டத்தில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளதால் மக்கள் மிகுந்த அவதிக்கு ஆளாகியுள்ளனா்.

திருநெல்வேலி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை போதிய அளவில் பெய்யாத நிலையில் குளங்கள், நீா்நிலைகள் பலவும் வடு கிடக்கின்றன. இந்தநிலையில் மாா்ச் முதல் வாரத்தில் இருந்தே கோடை வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளது. வழக்கமாக இம் மாவட்டத்தில் தை, மாசி பட்டத்தில் (பிப்ரவரி- மாா்ச் முதல்வாரம்) வெப்பச்சலனம் மற்றும் தென்மேற்கு காற்று காரணமாக மிதமான மழை பெய்வது வழக்கம். ஏப்ரல் முதல் வாரத்தில் இருந்து தான் கோடை வெப்பம் அதிகரிக்கும். ஆனால், நிகழாண்டில் மூன்று வாரங்கள் முன்கூட்டியே கோடையின் தாக்கம் அதிகரித்துள்ளது.

வெயிலின் தாக்கத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.