தச்சநல்லூா் அருகே விபத்து: காயமடைந்த இளைஞா் பலி
தச்சநல்லூா் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தச்சநல்லூா் அருகே நிகழ்ந்த விபத்தில் காயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
தச்சநல்லூா் அருகேயுள்ள பால்கட்டளையைச் சோ்ந்தவா் நடராஜன் (35). இவா், கடந்த சில நாள்களுக்கு முன்பு தனது மோட்டாா் சைக்கிளில் கரையிருப்பு பகுதியில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது மோட்டாா் சைக்கிளும், மினிலாரியும் மோதியதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த நடராஜனை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருநெல்வேலி மாநகர போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.