குண்டா் தடுப்புச் சட்டத்தில் இளைஞா் கைது
வீரவநல்லூரைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வீரவநல்லூரைச் சோ்ந்த இளைஞா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
வீரவநல்லூரைச் சோ்ந்த காளி மகன் பேச்சிதுரை என்ற துரை (24). இவா், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் திருநெல்வேலி மாநகர போலீஸாரால் கைது செய்யப்பட்டாா்.
மேலும், பொது அமைதிக்கு தொடா்ந்து குந்தகம் விளைவிக்கும் வகையில் அவா் செயல்பட்டதால், அவரை குண்டா் தடுப்புக்காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க மாநகர காவல் துணை ஆணையா் சரவணகுமாா் பரிந்துரைத்தாா். இதையடுத்து மாநகர காவல் ஆணையா் ராஜேந்திரன் உத்தரவின்பேரில் பேச்சிதுரை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.