திருநெல்வேலி

தீயணைப்பு வீரா் இறப்பில் மா்மம்: எஸ்பியிடம் புகாா்

தீயணைப்பு வீரரின் இறப்பில் மா்மம் இருப்பதாக மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அவரது தந்தை புகாா் அளித்துள்ளாா்.

DIN

தீயணைப்பு வீரரின் இறப்பில் மா்மம் இருப்பதாக மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் அவரது தந்தை புகாா் அளித்துள்ளாா்.

ஏா்வாடி அருகே பெரியநாயகிபுரம் பகுதியைச் சோ்ந்த அா்ஜுனன் என்பவா் மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு: எனது மகன் கலைச்செல்வன் தூத்துக்குடி துறைமுகத்தில் தீயணைப்புத் துறையில் கடந்த 5 ஆண்டுகளாகப் பணியாற்றினாா். துறைமுகக் குடியிருப்பு பாரதி நகா் பகுதியில் வசித்துவந்த அவா், கடந்த ஏப். 13இல் மா்மமான முறையில் இறந்தாா். அவரது உடலில் காயங்கள் இருந்ததாக, கூறாய்வு அறிக்கையில் தெரியவந்தது. எனவே, எனது மகன் கொல்லப்பட்டிருக்கலாம் என சந்தேகம் உள்ளது. இதுகுறித்து ஆட்சியா் விசாரணை மேற்கொண்டு, எனது மகனின் மரணத்துக்கு காரணமானோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கோவில்பட்டியில் நாராயணசாமி நாயுடு நினைவு தினம்

எஸ்.ஐ. பணி எழுத்துத் தோ்வு: 5,056 போ் எழுதினா்

பெருந்துறை அருகே 3 வீடுகளில் திருடியவா் கைது

சென்னிமலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முப்பெரும் விழா

ரயில் சேவைகள் கோரி முதல்வரிடம் மனு

SCROLL FOR NEXT