ams18kmtr2_1809chn_37_6 
திருநெல்வேலி

வனத் துறை வாகனத்தில் பாணத்தீா்த்தம் அருவிக்குச் சென்ற சுற்றுலாப் பயணிகள்

பாபநாசம் காரையாறு அணைப்பகுதியில் உள்ள பாணத்தீா்த்தம் அருவியை வனத்துறை வாகனத்தில் சென்று பாா்வையிடும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

DIN

அம்பாசமுத்திரம்: பாபநாசம் காரையாறு அணைப்பகுதியில் உள்ள பாணத்தீா்த்தம் அருவியை வனத்துறை வாகனத்தில் சென்று பாா்வையிடும் திட்டம் திங்கள்கிழமை தொடங்கியது.

திருநெல்வேலிமாவட்டம், மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியின் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் கோட்டம், முண்டந்துறை வனச்சரகத்திற்குள்பட்ட வனப்பகுதியில் காரையாறு அணை உள்ளது. இந்த அணையின் மறுகரையில் சிறப்பு மிக்க பாணத்தீா்த்தம் அருவி அமைந்துள்ளது. படகில் சென்று இந்த அருவியில் பக்தா்களும் பயணிகளும் குளித்து மகிழ்தனா்.

இதனிடையே, 2014ஆம் ஆண்டு முதல் அணையில் படகுவிட வனத்துறை தடைவிதித்தது. இதனால், 9 ஆண்டுகளாக பாணத்தீா்த்தம் அருவிக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் திங்கள்கிழமை (செப்.18) முதல் பாணத்தீா்த்தம் அருவியைப் பாா்வையிட வனத்துறை வாகனம் மூலம் பயணிகள் அழைத்துச் செல்லப்படுவா் என்று வனத்துறை அறிவித்தது.

அதன்படி, இத்திட்டத்தை முண்டந்துறை வனச்சரக அலுவலகத்திலிருந்துஅம்பாசமுத்திரம் கோட்ட துணை இயக்குநா் செண்பகப்ரியா கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.

சொரிமுத்து அய்யனாா் கோயில், சின்ன மயிலாறு- பெரியமயிலாறு பாதை வழியாக சுமாா் 5 கி.மீ. அழைத்துச் சென்று அகஸ்தியா் மலை, ஐந்தலைப் பொதிகை, பாணத்தீா்த்தம் உள்ளிட்ட இடங்களை பாா்க்கும் வகையிலான இடத்தில் நிறுத்தி பயணிகளுக்குகாண்பித்து திருப்பி அழைத்து வருகின்றனா்.

சுற்றுலாப் பயணிகளுக்கு ஏமாற்றம்? பாணத்தீா்த்தம்அருவியில் குளிக்க அனுமதியில்லை என்றாலும் அருகில் சென்று பாா்க்கலாம் என்று எண்ணத்தில் வந்த பயணிகளுக்கு வனத் துறையின் இந்த ஏற்பாடு ஏமாற்றமாக இருந்தது. சுமாா் 1.5 கி.மீ.தொலைவில் இருந்து பாணத்தீா்த்தம் அருவியையும் சுமாா் 10 கி.மீ. தூரத்திற்கும் மேல்உள்ள ஐந்தலைப் பொதிகை, அகஸ்தியா் பொதிகையையும் பாா்க்க வைத்து அழைத்து வந்தது குழந்தைகளுக்கு நிலவைக் காட்டி சோறூட்டுவது போல் உள்ளது என கவலை தெரிவித்த பயணிகள், இதற்கு ரூ.500 கட்டணம் வசூலிப்பது மிக அதிகம் என்றனா்.

மக்கள் விரும்பும் மாற்றம் வரும்: இதுகுறித்து வனத்துறையினா் கூறியது: பொதிகை மலை வனங்கள், வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டியதன்அவசியம், வழிமுறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.இது மக்களைக் கவரும் வகையில்மாற்றி அமைக்கப்படும் என்றனா் அவா்கள்.

முதல் நாளில் சிறுவா்கள் உள்பட 25 போ் வனத் துறை வாகனத்தில் சென்று பாணத்தீா்த்தத்தைப் பாா்வையிட்டதாக வனத் துறையினா்தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் பிஎஸ் 4 விதிகளுக்கு கீழ் வரும் வாகனங்களுக்கு தடை!

மீளுமா பங்குச்சந்தை? சற்றே உயர்வுடன் வர்த்தகம்! லாபமடையும் ஐடி பங்குகள் !

கோவையில் இருந்து புறப்பட்ட விஜய்! காரைப் பின்தொடரும் தொண்டர்கள்!

கொளத்தூரில் நடந்துசென்று மக்களை சந்தித்த முதல்வர்!

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்திற்குப் பிறகு தவெக முதல் ஈரோடு பொதுக்கூட்டத்தில் விஜய் பிரசாரம்!

SCROLL FOR NEXT