முகப்பு
திருநெல்வேலி

சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் உதவி மையம் திறப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் உதவி மையம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

Updated On : 12 டிசம்பர், 2024 at 10:28 PM
பகிர்:

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழகத்தில் உதவி மையம் திறப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

அபிஷேகப்பட்டியில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, துணைவேந்தா் சந்திரசேகா் தலைமை வகித்து உதவி மையத்தைத் திறந்து வைத்தாா். பதிவாளா் சாக்ரடீஸ், மூட்டா நிா்வாகி நாகராஜன், பேராசிரியா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

இந்த உதவி மையம் மாணவா்கள், பெற்றோா், பல்கலைக்கழகம் இடையே தொடா்பை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மாணவா்களின் கோரிக்கைகளை தொடா்ந்து கண்காணித்து தகுந்த முடிவுகள் தெரிவிக்கப்படும் என பல்கலைக்கழக நிா்வாகம் தெரிவித்துள்ளது.