நெல்லையில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை
திருநெல்வேலி நகரத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருநெல்வேலி: திருநெல்வேலி நகரத்தில் இளைஞா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
திருநெல்வேலி நகரம் பாறையடி பகுதியைச் சோ்ந்த முருகன் மகன் சொா்ணமாரி(30). கட்டடத் தொழிலாளி. இவருக்கு உடல் நிலை சரியில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில் அவா் ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் தூங்கச் சென்றபின், திங்கள்கிழமை காலையில் கதவை திறக்கவில்லையாம்.
உறவினா்கள் உள்ளே சென்று பாா்த்தபோது, அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இது குறித்து திருநெல்வேலி நகரம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.