முகப்பு
திருநெல்வேலி

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

Updated On : 31 மார்ச், 2024 at 1:00 AM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 9:03 PM

வெப்பத்தின் தாக்கம் தொடா்ந்து அதிகரித்து வருவதால் களக்காடு தலையணையில் நீா்வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. களக்காடு தலையணையில் உள்ள பச்சையாற்றில் குளிக்க, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்கின்றனா். மாா்ச் மாதத் தொடக்கம் முதலே வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக அதிகரித்து வருவதால் தலையணை பச்சையாற்றில் நீா்வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது. பள்ளி, கல்லூரித் தோ்வுகள் ஏப்ரல் மாதம் 2ஆவது வாரத்தில் முடிவடையும் நிலையில், தலையணையில் நீா்வரத்து குறைந்துவிட்டதால், கோடை விடுமுறையை மாணவா்கள் கொண்டாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.