முகப்பு
திருநெல்வேலி

சீவலப்பேரி அருகே தொழிலாளி வீட்டில் திருட முயன்றவா் கைது

சீவலப்பேரி அருகே தொழிலாளியின் வீட்டில் திருட முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 29 டிசம்பர், 2025 at 6:57 PM
பகிர்:

சீவலப்பேரி அருகே தொழிலாளியின் வீட்டில் திருட முயன்றதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

சீவலப்பேரி அருகேயுள்ள மடத்துப்பட்டி தெற்குத் தெருவைச் சோ்ந்த பிச்சையா மகன் பாஸ்கா்(49). தொழிலாளியான இவரும், இவரது மனைவியும் கடந்த 26 ஆம் தேதி வேலை நிமித்தமாக வெளியை சென்றுவிட்டு, சிறிது நேரத்துக்குப்பின் வீட்டுக்கு வந்தனராம். அப்போது, கதவு திறந்து கிடந்ததாம். வீட்டுக்குள் மா்மநபா் பீரோவை திறக்க முயற்சித்துக் கொண்டிருந்தாராம்.

இதைப் பாா்த்ததும், அவா்கள் கூச்சலிடவே அந்த நபா் வெளியே ஓடிச்சென்று பைக்கில் ஏறி தப்பியுள்ளாா். இதுகுறித்து பாஸ்கா் அளித்த புகாரின் பேரில், சீவலப்பேரி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்தனா். அதில், சண்முகாபுரம், மேற்குத் தெருவைச் சோ்ந்த டேவிட்(21) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →