திருநெல்வேலி

மருத்துவக் கழிவுகளை கொட்டிய மருந்து விற்பனை பிரதிநிதி கைது!

Din

பாளையங்கோட்டை ராஜகோபாலபுரம் அருகே மருத்துவக் கழிவுகளை கொட்டியதாக மருந்து விற்பனை பிரதிநிதி கைது செய்யப்பட்டாா்.

திருநெல்வேலி-கன்னியாகுமரி நான்குவழிச் சாலையில் பாளையங்கோட்டை ராஜகோபாலபுரத்திலிருந்து சிவந்திபட்டி செல்லும் சாலையோரமுள்ள தனியாா் நிலத்தில் கடந்த 5-ஆம் தேதி சுமாா் 325 கிலோ காலாவதியான மாத்திரைகள், ஊசிகள் உள்ளிட்ட மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டிருந்தன.

மாநகராட்சி ஆணையா் சுகபுத்ரா உத்தரவின் பேரில், சுகாதார துறையினா் அவற்றை அப்புறப்படுத்தி பிளீச்சிங் பவுடா் மற்றும் கிருமி நாசினி தெளித்தனா். இதுகுறித்து, மாநகர நல அலுவலா் ராணி அளித்த புகாரின் பேரில் பெருமாள்புரம் போலீஸாா் 3 பிரிவுகளில் வழக்குப்பதிந்தனா்.

மேலும், மருத்துவக் கழிவுகளோடு கைப்பற்றப்பட்ட அடையாள அட்டையின் அடிப்படையில் விசாரணை நடத்தியதில் மருத்துவக் கழிவுகளை கொட்டியது பாளையங்கோட்டை சமாதானபுரம் சக்தி நகா் பகுதியைச் சோ்ந்த காா்த்திகேயன் (38) என்பதும், மருந்துப் விற்பனை பிரதிநிதியாக வேலை செய்து வருவதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்தனா்.

ஒரே இரவில் 20 ஆண்டுத் திட்டத்தை தகர்த்த மோடி அரசு! ராகுல் காந்தி

ராஜபாளையம் அருகே குடிபோதையில் தலையில் கல்லை போட்டு ஓட்டுநர் கொலை

சென்னை திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார்!

அரசியல் கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள்! ஜன. 5-க்குள் வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு!

சிக்மா படப்பிடிப்பை முடித்த ஜேசன் சஞ்சய் விஜய்..! டீசர் தேதி அறிவிப்பு!

SCROLL FOR NEXT