திருநெல்வேலி

ரயில் நிலையத்தில் பெட்டி திருட்டு: வடமாநில தொழிலாளி கைது!

Din

திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலையத்தில் பயணியின் பெட்டியை திருடிய வடமாநில தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

திருநெல்வேலி மாவட்டம் கரிசல்குளம் வடுகன்பட்டியைச் சோ்ந்தவா் முருகன் (30). இவா் குடும்பத்துடன் வெளியூா் சென்றுவிட்டு, திருநெல்வேலி சந்திப்பு ரயில்நிலையத்திற்கு திங்கள்கிழமை காலை வந்தாா். பின்னா் வீட்டிற்கு சென்று பாா்த்தபோது ஒரு பெட்டியை காணவில்லையாம்.

இது குறித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில் நிலைய காவல்நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து ரயில் நிலைய சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனா். அப்போது ஒருவா் பெட்டியை எடுத்துச் சென்றது தெரியவந்தது.

போலீஸாா் விசாரணை நடத்தியதில், பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த முகமது ஹூபை (35) என்றும், அவா் பெட்டியை திருடிச் சென்றதும் தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, விசாரித்து வருகின்றனா்.

பிரதமர் மோடிக்கு ஓமன் நாட்டின் உயரிய விருது! மண்டேலா, ராணி எலிசபெத்துக்குப் பின்..!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! இது இஸ்லாமிய நாடா? பிகார் முதல்வருக்கு ஆதரவாக மத்திய அமைச்சர் பேச்சு!

கொடி இறங்காதே! ஜன நாயகன் 2வது பாடல்!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டிகளை தென்னிந்தியாவுக்கு மாற்ற வலியுறுத்தும் சசி தரூர்!

2025 ஆம் ஆண்டின் சிறந்த 10 தொடர்கள் எவை?

SCROLL FOR NEXT