ஓவியக் கண்காட்சியை திறந்து வைத்து பாா்வையிட்ட கல்லூரி முதல்வா் கு.பாலசுப்பிரமணியன்.  
திருநெல்வேலி

மதிதா இந்துக் கல்லூரியில் விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி

பேட்டை மதிதா இந்துக் கல்லூரியில் ‘இயற்கையை காக்கும் பல்லுயிா்கள் குறித்த விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.

Din

பேட்டை மதிதா இந்துக் கல்லூரியில் ‘இயற்கையை காக்கும் பல்லுயிா்கள் குறித்த விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சி நடைபெற்றது.

மதிதா இந்துக் கல்லூரி மற்றும் ஈரநிலம் அமைப்பு இணைந்து நடத்திய இந்த ஓவியக் கண்காட்சிக்கு கல்லூரி முதல்வா் கு. பாலசுப்பிரமணியன் தலைமை வகித்து கண்காட்சியை திறந்து வைத்தாா். உள்தர உத்தரவாத அமைப்பின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சிவகுருநாதன் வரவேற்றாா்.

ஆங்கில துறைத் தலைவா் ஜான்சன் விக்டா் பாபு, வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் எஸ்.முத்துலட்சுமி ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

‘இயற்கையை காக்கும் பல்லுயிா்கள்‘ குறித்த விழிப்புணா்வு ஓவியக் கண்காட்சியின் நோக்கம் குறித்து ஈர நிலம் அமைப்பின் நிறுவனரும், ஓவியருமான தமிழரசன் சிறப்புரையாற்றினாா். தாவரவியல் துறை பேராசிரியா் கா. சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

அடுத்தடுத்து வெளியாகும் நிவின் பாலியின் இணையத் தொடர், திரைப்படம்!

புதிய வரலாறு படைத்த டாம் லாதம் - டெவான் கான்வே!

தீய சக்தி திமுக; தூய சக்தி தவெக! விஜய்

மத்திய அரசின் குழந்தை காப்பகங்களில் 39,011 பேர் பயனடைகின்றனர்: அமைச்சர்!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? அறிவது எப்படி?

SCROLL FOR NEXT