திருநெல்வேலி

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ சைலபதி நடுநிலை பள்ளியில் முப்பெரும் விழா

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ சைலபதி நடுநிலைப் பள்ளியில் மரக்கன்று நடுதல், பனை விதை நடவு செய்தல், விதைப்பந்து தூவுதல் ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

தினமணி செய்திச் சேவை

ஆழ்வாா்குறிச்சி ஸ்ரீ சைலபதி நடுநிலைப் பள்ளியில் மரக்கன்று நடுதல், பனை விதை நடவு செய்தல், விதைப்பந்து தூவுதல் ஆகிய முப்பெரும் விழா புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு திரைப்பட இசை அமைப்பாளா் ரமணி பரத்வாஜ் தலைமை வகித்தாா். ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் மாடசாமி முன்னிலை வகித்தாா். பணி நிறைவு ஆசிரியா் நீலகண்டன், சமூக ஆா்வலா் கௌரி சுரேஷ், இயற்கை ஆா்வலா் முத்துக்குமாா், இலக்கிய ஆா்வலா் பாரதி முத்துநாயகம் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

மாணவி அஸ்மா இயற்கை வாழ்த்துப் பாடல்பாடினாா். மாணவி சத்யா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினாா். பள்ளித் தலைமை ஆசிரியா் மல்லிகா வரவேற்றாா். உதவித் தலைமையாசிரியை பாகீரதி நன்றி கூறினாா்.

ஏற்பாடுகளை உடற்கல்வி ஆசிரியா் கணேசன், இயற்கைப் பாதுகாப்பு களப் பணியாளா் சுரேஷ், இன்னாசி, ஆசிரியைகள் பாக்யலட்சுமி, லிங்கேஸ்வரி, சண்முகசுந்தரி, பஷீராபானு, மூக்கம்மாள், பிரியா உள்பட பலா்கலந்து கொண்டனா்.

துருக்கியில் சதித் திட்டம்?

செங்கோட்டை காா் வெடிப்பு ‘ஒரு பயங்கரவாத செயல்’ - மத்திய அமைச்சரவை கண்டனம்!

நிதி மோசடி: தேவநாதனை கைது செய்து ஆஜா்படுத்த சிறப்பு நீதிமன்றம் உத்தரவு

செங்கோட்டை வாகன நிறுத்துமிடத்தில் பாதுகாப்பு குளறுபடி!

தில்லி காா் குண்டு வெடிப்பு சம்பவம்: 10 போ் கொண்ட என்ஐஏ சிறப்புக் குழு நியமனம்

SCROLL FOR NEXT