தொழிலாளி மர்மச்சாவு
உடன்குடி அருகே செல்வபுரத்தில் தொழிலாளி
உடன்குடி அருகே செல்வபுரத்தில் தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
சாத்தான்குளம் அருகே பேய்க்குளத்தைச் சேர்ந்தவர் ஆ. சித்திரைசெல்வன் (40) கூலித்தொழிலாளி. இவரது மனைவி லட்சுமி, ஒரு மகன் உள்ளார். லட்சுமி தற்போது நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். திங்கள்கிழமை உடன்குடி சந்தைக்கு பொருள்கள் ஏற்றி இறக்க வந்த சித்திரைசெல்வன் மர்மமான முறையில் செல்வபுரம் அருகே இறந்துகிடந்தார்.