முகப்பு
தூத்துக்குடி

இளையோர் செஞ்சுருள் முகாம்

மாநில அளவிலான இளையோர் செஞ்சுருள் முகாமில் கலந்து கொண்டு பரிசு பெற்ற தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளி மாணவர், மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி

இளையோர் செஞ்சுருள் முகாம்

மாநில அளவிலான இளையோர் செஞ்சுருள் முகாமில் கலந்து கொண்டு பரிசு பெற்ற தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளி மாணவர், மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 9:55 AM
பகிர்:

மாநில அளவிலான இளையோர் செஞ்சுருள் முகாமில் கலந்து கொண்டு பரிசு பெற்ற தூத்துக்குடி சக்தி வித்யாலயா பள்ளி மாணவர், மாணவிகளுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

தமிழ்நாடு இந்தியன் ரெட்கிராஸ் சார்பில் மாநில அளவிலான இளையோர் செஞ்சுருள் கழக முகாம் ராமநாதபுரத்தில் அண்மையில் நடைபெற்றது. இதில், தமிழகம் முழுவதும் இருந்து பல்வேறு  பள்ளிகளைச் சேர்ந்த மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர்.

முகாமின்போது தியானப் பயிற்சி, ரத்ததான விழிப்புணர்வு, கைவினைப் பொருள்கள் கண்காட்சி, கலை நிகழ்ச்சிகள், மரக்கன்று நடுதல், தீ தடுப்பு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

இதில், தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியின் மாணவர்கள் ராஜ்பரத், அபிஷேக், சுதீஸ்பெருமாள், பாலஹரிஹரன், ஒருங்கிணைப்பாளர் வீரலட்சுமி ஆகியோர் கலந்து கொண்டு சிறந்த அணிக்கான முதல் பரிசும், கலைநிகழ்ச்சிக்கு இரண்டாம் பரிசும் பெற்றனர்.

பரிசு பெற்ற மாணவர்களுக்கான பாராட்டு விழா தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிகுலேஷன் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.  விழாவில் பள்ளியின் தாளாளர் ஜெயா சண்முகம் வரவேற்றார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ராமசந்திரன், மாவட்ட கல்வி அலுவலர் ரத்தினம் மற்றும் ஜே.ஆர்.சி. மாவட்ட ஒருங்கிணைப்பாளர்  கிருபை வேல்முருகன் ஆகியோர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினர்.

விழா ஏற்பாடுகளை சக்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியின் துணை முதல்வர் நாகலட்சுமி செய்திருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →