கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை
உடன்குடி அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
உடன்குடி அருகே கல்லூரி மாணவி வெள்ளிக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காட்டுவாதட்டு பகுதியைச் சேர்ந்தவர் முருகன். இவர், ஆறுமுகனேரி பேரூராட்சியில் மேஸ்திரியாகப் பணிபுரிகிறார்.
இவரது மகள் ரஞ்சிதா (20). கல்லூரி மாணவி.
குடும்பப் பிரச்னை காரணமாக இவரை பெற்றோர் கண்டித்தனராம். இதனால் மனவேதனையடைந்த ரஞ்சிதா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாராம். இதுகுறித்து குலசேகரன்பட்டினம் காவல் துணை ஆய்வாளர் இசக்கி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.ன