தூத்துக்குடி

தூத்துக்குடியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

DIN

மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் வியாழக்கிழமை காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மத்திய அரசை கண்டித்தும், ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தியும் தூத்துக்குடியில் காங்கிரஸ் கட்சி சார்பில் வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூர் சாலையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தூத்துக்குடி மாநகர் மாவட்டத் தலைவர் அருள் தலைமை வகித்தார்.  புதுவை மாநில தில்லி பிரதிநிதியான ஜாண்குமார் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.
இதில், மாநில பொதுச் செயலர்கள் சிரஞ்சீவி, அருள் பெத்தையா, தெற்கு மாவட்டத் தலைவர் சிவசுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT