தூத்துக்குடி

தாய்விளை, வடலிவிளையில் பாரதமாதா பூஜை

DIN

தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் தாய்விளை, வடலிவிளையில் பாரதமாதா பூஜை நடைபெற்றது.
தூத்துக்குடி தெற்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் உலக நன்மைக்காக 164 இடங்களில் பாரத மாதா பூஜை வழிபாடு நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி சாத்தான்குளம் ஒன்றியம், வாலிவிளையில் ஒன்றிய துணைத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையிலும், வடலிவிளையில் ஒன்றியச் செயலர் ராஜலிங்கம் தலைமையிலும் பூஜை நடைபெற்றது. மாநில பொதுச்செயலர் டாக்டர் அரசுராஜா தொடங்கிவைத்துப் பேசினார். மாவட்ட பொதுச்செயலர் பெ. சக்திவேலன் சிறப்புரையாற்றினார். இதில், அலங்கரிக்கப்பட்ட பாரத மாதா படத்துக்கு பூஜை நடைபெற்றது. தொடர்ந்து அனைவரும் உறுதிமொழியேற்றனர்.
இதில், நாசரேத் நகரத் தலைவர் வெட்டும்பெருமாள், நகர துணைத் தலைவர் இசக்கிமுத்து, நகரச் செயலர் உலகநாதன், நகர செய்தி தொடர்பாளர் ஹரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். செல்லத்துரை நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT