முகப்பு
தூத்துக்குடி

தூத்துக்குடியில்  சமக ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On : 10 ஏப்ரல், 2018 at 4:54 AM
பகிர்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தூத்துக்குடியில் சமத்துவ மக்கள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும், வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி சார்பில், தூத்துக்குடியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
  வடக்கு மாவட்டச் செயலர் வில்சன் தலைமை வகித்தார். தெற்கு மாவட்டச் செயலர் தயாளன் முன்னிலை வகித்தார். இதில் , இளைஞரணிச் செயலர் குரூஸ் திவாகர், தெற்கு மாவட்ட துணைச் செயலர் மலர்விழி, மகளிரணிச்  செயலர் ஜெயந்தி, துணைச் செயலர் சந்திரா உள்பட  பலர் கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.