கோவில்பட்டி அருகே கார் மோதி விவசாயி சாவு
கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதியதில் விவசாயி இறந்தார்.
கோவில்பட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை மோட்டார் சைக்கிள்கள் மீது கார் மோதியதில் விவசாயி இறந்தார்.
திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகேயுள்ள ஆழ்வார்னேரியைச் சேர்ந்த கோவில்மணி மகன் சார்லஸ் (28). இவர் காரில் சாத்தூரிலிருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் நாலாட்டின்புத்தூரையடுத்த குமாரபுரம் விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென நிலைகுலைந்த கார், முன்னால் சென்று கொண்டிருந்த இரு மோட்டார் சைக்கிள்கள் மீது மோதியது.
இதில், மோட்டார் சைக்கிளில் சென்ற இடைசெவல் காலனி தெருவைச் சேர்ந்த விவசாயி தேவராஜ் (65) சம்பவ இடத்திலேயே இறந்தார். மற்றொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரான அதே பகுதியைச் சேர்ந்த வேலுசாமி மகன் முருகன்(43) காயமடைந்தார். நாலாட்டின்புத்தூர் போலீஸார் வழக்குப் பதிந்து கார் ஓட்டுநர் சார்லஸை கைது செய்தனர்.