திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் பதியில் மார்ச் 4இல் அவதார தின விழா
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில், மார்ச் 4ஆம் தேதி 186ஆவது அவதார தின விழா நடைபெறுகிறது.
திருச்செந்தூர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரபதியில், மார்ச் 4ஆம் தேதி 186ஆவது அவதார தின விழா நடைபெறுகிறது.
இதை முன்னிட்டு மார்ச் 3ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு பணிவிடை, உகப்படிப்பு, 6 மணிக்கு அன்னதர்மம், நண்பகல் 12 மணிக்கு உச்சிப்படிப்பு, பணிவிடையைத் தொடர்ந்து, பிற்பகல் 1 மணிக்கு அன்னதர்மம் நடைபெறுகிறது. மாலை 5 மணிக்கு பணிவிடை, அய்யா புஷ்ப வாகனத்தில் பவனி ஆகியவை நடைபெறுகின்றன. தொடர்ந்து அன்னதர்மம் நடைபெறுகிறது.
மார்ச் 4ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு தாலாட்டு, பள்ளி உணர்த்தல், அபயம் பாடுதல் நடைபெறுகிறது. பின்னர் காலை 6.27 மணிக்கு சூரிய உதயத்தில் கடலில் பதமிடுதல், அவதார விழா பணிவிடை ஆகியன நடைபெறுகின்றன. தொடர்ந்து அன்னதர்மம் நடைபெறுகிறது.
ஏற்பாடுகளை வள்ளியூர் அய்யா வழி அகில திருக்குடும்ப மக்கள் சபைத் தலைவர் சுந்தரபாண்டி தலைமையில் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.