தூத்துக்குடி

ஆறுமுகனேரியில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்

DIN

ஆறுமுகனேரியில் அருள்மிகு சோமசுந்தரி சமேத சோமநாத சுவாமி திருக்கோயில் சுவாமி சன்னதி முன்புறம் வாகனம் நிறுத்துவதற்கு ஏதுவாக தனியாரால் போடப்பட்ட காம்பவுண்டு சுவரை அகற்ற கோரி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
இந்த  ஆர்ப்பாட்டத்துக்கு  நகர தமாகா தலைவர் பி.முருகன் தலைமை வகித்தார். காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலர் டி.சுப்பிரமணியன், தமாகா திருச்செந்தூர் வட்டாரத் தலைவர் எம்.சுந்தரலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றியச் செயலர் பி.ஆனந்தவேல்,  நகரச் செயலர் எஸ்.ஜெயபாண்டியன்,  காமராஜ் நற்பணி மன்றத்தைச் சேர்ந்த யு. ராமஜெயம்,  ஐக்கிய ஜனதா தள மாவட்டக் குழு உறுப்பினர் ஜி.பிராபாகரன் மற்றும்  என்.சி.பி. மாவட்டத் தலைவர் ச.பொன்ராஜ், அம்மா தீபா பேரவை ஒன்றியச் செயலர் சி.தனசேகரன், கே.டி.கோசல்ராம் பேரவைத் தலைவர் மு.பற்குண பெருமாள்,  இந்து முன்னணி நகரச் செயலர் பி.சேர்மத்துரை, திமுக  விநாயகம்,  பாமக கே.கருப்பசாமி உள்ளிட்ட பலர்  கலந்து கொண்டனர்.
 பாஜக  என்.ராதாகிருஷ்ணன் வரவேற்றார்.   ஏ.இக்கிமுத்து நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

தில்லி பாஜகவில் இணைந்த ஆம் ஆத்மி, காங்கிரஸ் பிரமுகா்கள்!

தில்லியில் 2,800 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை: மொத்தம் 1.52 கோடி வாக்காளா்கள்

அச்சிடுவோரின் முகவரி இல்லாத அரசியல் விளம்பர பலகைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

SCROLL FOR NEXT