உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு மையம் திறப்பு
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு மையத்தை கோட்டாட்சியர் தங்கவேலு திறந்து வைத்தார்.
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு மையத்தை கோட்டாட்சியர் தங்கவேலு திறந்து வைத்தார்.
திருச்செந்தூர் வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகள், பொதுமக்களுக்கு உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் வளாகத்தில் புதியதாக உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
இம்மையத்தை கோட்டாட்சியர் தங்கவேலு திறந்து வைத்தார். வட்டாட்சியர் தில்லைபாண்டி முன்னிலை வகித்தார். சாயம் கலந்த பச்சை பட்டாணி, சாயம் கலந்த தேயிலை தூள், பப்பாளி விதை கலந்த மிளகு தூள், சீனி கலந்த தேன், அயோடின் கலக்காத உப்பு, காலாவதியான உணவு பொருள்கள், அவற்றின் தயாரிப்பு தேதி உள்ளிட்ட விவரம் இல்லாத உணவு பாக்கெட்டுகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. போலிகளை கண்டறியும் முறைகள் குறித்து உணவு பாதுகாப்பு அலுவலர் பொன்முத்து ஞானசேகரன் செயல் விளக்கமளித்தார். கோடை காலம் முழுவதும் இம்முகாம் நடைபெறும் என தெரிவித்தனர்.