திருச்செந்தூர் பகுதியில் இன்று மின்தடை
திருச்செந்தூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை(மே 15) மின்தடை செய்யப்படுகிறது.
திருச்செந்தூர் பகுதியில் செவ்வாய்க்கிழமை(மே 15) மின்தடை செய்யப்படுகிறது.
இது குறித்து திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் இரா.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : திருச்செந்தூர் கோட்டத்திற்கு உள்பட்ட திருச்செந்தூர் மற்றும் காயல்பட்டினம் ஆகிய உபமின்நிலையங்களில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் புன்னக்காயல், ஆத்தூர், ஆறுமுகனேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலாபுரம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கணி, தேமான்குளம், திருக்கோளுர் ஆகிய ஊர்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.