தூத்துக்குடி

திருச்செந்தூரில் 12 கால் மண்டபத்தின் மேற்கூரை இடிந்தது: பக்தர்கள் தப்பினர் 

DIN

திருச்செந்தூர் சன்னதித் தெருவில் பழைமை வாய்ந்த 12 கால் மண்டபத்தின் மேற்கூரை புதன்கிழமை திடீரென இடிந்து விழுந்தது . அப்போது யாரும் அந்த வழியாக வராததால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் வசதிக்காக சன்னதித் தெருவில் இருபக்க தூண்கள் மற்றும் ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையால் நிழல்பாதை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தத் தெருவில் உள்ள அகஸ்தியர் கோயில் அருகில் பழைமையான செங்குந்தர் 12 கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபம் பலமிழந்து காணப்பட்ட நிலையில், கடந்த இரு தினங்களாக அப்பகுதியில் பெய்த மழையால் மண்டபத்தின் மேற்கூரை ஈரப்பதம் தாங்காமல் புதன்கிழமை இடிந்து விழுந்தது. அந்த நேரத்தில் பக்தர்கள் யாரும் அவ்வழியாக வராததால் விபரீதம் தவிர்க்கப்பட்டது.
இதையடுத்து, அப்பகுதியில் யாரும் செல்லாதவாறு கயிறு கட்டப்பட்டுள்ளது. பக்தர்கள் நடமாட்டம் மிகுந்த பகுதி என்பதால், மண்டபம் மேலும் இடிந்து விழுவதற்குள் உரிய  நடவடிக்கை எடுக்க  அதிகாரிகள் முன்வர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT