தூத்துக்குடி

கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இளைஞரை தாக்கி பணம் பறிப்பு

DIN


கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நடைமேடை அருகே நடந்து சென்று கொண்டிருந்த பட்டதாரி இளைஞரை தாக்கி பணம் பறித்த மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கோவில்பட்டியையடுத்த முடுக்கலாங்குளம் நடுத் தெருவைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் சமுத்திரப்பாண்டியன் (21). பி.எஸ்.சி. பட்டதாரியான இவர், தூத்துக்குடியில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் அரசுத் தேர்வுக்காக படித்து வருகிறாராம். இந்நிலையில் திங்கள்கிழமை மைசூர் - தூத்துக்குடி ரயிலில் செல்வதற்காக கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நடைமேடையில் நடந்து சென்று கொண்டிருந்தாராம். அப்போது அவரை வழிமறித்த 3 மர்ம நபர்கள் அவரை தாக்கி அவரிடமிருந்த ரூ.2ஆயிரத்தை பறித்தனர். இதில் காயமடைந்த சமுத்திரப்பாண்டியன் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி ரயில்வே போலீஸார் வழக்குப் பதிந்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிகரிக்கும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ பாதிப்புகள்: மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு - ஓஆா்எஸ் கரைசல்

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல் பிரசாரம் நிறைவு -குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு

வெள்ளை மாளிகை பாதுகாப்பு தடுப்பில் மோதிய காா்: ஓட்டுநா் உயிரிழப்பு

கோடையில் நீா்ச்சத்து இழப்பை தவிா்க்க மோா், கூழ், இளநீா் பருகுவது அவசியம்: சித்த மருத்துவா் சோ.தில்லைவாணன்

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: விசாரணையை புறக்கணிக்க ஊழியா்களுக்கு உத்தரவு

SCROLL FOR NEXT