முகப்பு
தூத்துக்குடி

ஆத்தூர், முக்காணி, ஏரல் பகுதிகளில் தாமிரவருணி மஹா புஷ்கர விழா இன்று நிறைவு

தாமிரவருணி மஹா புஷ்கர விழாவின் பதினோறாம் நாளான திங்கள்கிழமை ஆத்தூர், முக்காணி, ஏரல்  மற்றும்

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:34 AM
பகிர்:

தாமிரவருணி மஹா புஷ்கர விழாவின் பதினோறாம் நாளான திங்கள்கிழமை ஆத்தூர், முக்காணி, ஏரல்  மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்தினருடன் வந்து தாமிரவருணி ஆற்றில் புனித நீராடினர். இப்பகுதியில் புஷ்கரவிழா செவ்வாய்க்கிழமை நிறைவு பெறுகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் முறப்பநாடு உள்ளிட்ட பகுதிகளில் 11ஆம் தேதி மஹா புஷ்கர விழா தொடங்கியதால் விழா திங்கள்கிழமை நிறைவு பெற்றது. 
கடந்த 12ஆம்  தேதி தொடங்கிய ஆத்தூர் சோமதீர்த்தம், முக்காணி அகஸ்திய தீர்த்த படித்துறை,  சங்கமேஸ்வர தீர்த்த படித்துறை,   சேர்ந்தபூமங்கலம் சண்டிகா தீர்த்த படித்துறை,  சம்புநாராயண படித்துறை தீர்த்தம்,  உமரிக்காடு அக்னி தீர்த்த படித்துறை,  சொக்கப்பழக்கரை வாழவல்லான கங்கா தீர்த்த படித்துறை,  சேதுக்குவாய்த்தான் வஸ்து தீர்த்த படித்துறை,  ஏரல் ஞான தீர்த்த படித்துறை,  ஏரல் தீர்த்தகரை சுந்தர விநாயகர் கோயில் படித்துறை ஆகியவற்றில் மஹா புஷ்கர விழா செவ்வாய்க்கிழமை நிறைவு பெறுகிறது. 
திங்கள்கிழமை உள்ளூர், வெளியூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் ஆயிரக்கணக்கில் வந்து, தாமிரவருணியில் புனித நீராடினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.