முகப்பு
தூத்துக்குடி

தடகள விளையாட்டுப் போட்டி: பிரகாசபுரம் புனித மரியன்னை பள்ளி சிறப்பிடம்

வட்டார  தடகள விளையாட்டுப் போட்டியில் பிரகாசபுரம் புனித மரியன்னை நடுநிலைப் பள்ளி மாணவர், மாணவிகள்  சிறப்பிடம்  பெற்றனர். 

Updated On : 23 அக்டோபர், 2018 at 1:33 AM
பகிர்:

வட்டார  தடகள விளையாட்டுப் போட்டியில் பிரகாசபுரம் புனித மரியன்னை நடுநிலைப் பள்ளி மாணவர், மாணவிகள்  சிறப்பிடம்  பெற்றனர். 
மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானத்தில் வட்டார அளவிலான தடகள விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பிரகாசபுரம் புனித மரியன்னை நடுநிலைப் பள்ளி  மாணவர் கந்தகணேஷ்  நீளம் தாண்டுதலில் முதலிடத்தையும், மாணவிஅன்னம்மாள் 2ஆவது இடத்தையும், மாணவி  லெட்சுமி மாருதி 3ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர்.
குண்டு எறிதலில் மாணவி  யோக லட்சுமி  முதலிடத்தையும், மாணவி  அன்னம்மாள் 2ஆவது இடத்தையும், மாணவி வைஷ்ணவி 3ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். 200 மீ. ஓட்டப்பந்தயத்தில் மாணவர் ஆனந்தராஜன் 3ஆவது இடத்தையும், 100 மீ.  ஓட்டப்பந்தயத்தில் மாணவி  செல்வகவிதா  3ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். சிறப்பிடம் பெற்ற  மாணவர்,  மாணவிகளை பிரகாசபுரம் பரிசுத்த பரலோக மாதாஆலய பங்குத்தந்தையும், பள்ளித் தாளாளருமான அந்தோணி இருதய தோமாஸ்,  தலைமைஆசிரியை  பாக்கியம் மற்றும் ஆசிரியைகள், அலுவலர்கள் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.