தூத்துக்குடி

தேசிய திறனாய்வில் உடன்குடி மாணவர்கள் சாதனை

DIN

மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில் நடைபெற்ற தேசிய திறனாய்வுத் தேர்வில் உடன்குடி நயினாப் பிள்ளைத் தெரு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மூன்று பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
2018-19 ஆம் ஆண்டிற்கான தேசிய திறனாய்வுத் தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்கள் சு.ரம்யா,சே.முகம்மது அப்சல்,சே.முகம்மது கஸ்ஸாலி ஜூபைர் ஆகியோரை உடன்குடி வட்டாரக் கல்வி அலுவலர் நம்பித்துரை, பள்ளித் தலைமையாசிரியை சு.தமிழரசி மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர். இம்மாணவர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர் மூலம் மாதம் தோறும் ரூ 1000 வீதம் நான்கு ஆண்டுகளுக்கு கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மனிதம் மட்டும் இங்கே மலிவுதான்!

ஜல்லிக்கட்டு அரசியல்

உண்மை சம்பவத்தின் பின்னணியில்...

திரைக்கதிர்

மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க தடை -பஜ்ரங் புனியா விளக்கம்

SCROLL FOR NEXT