உலக எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணா்வு தினத்தையொட்டி விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் கருத்தரங்கம் மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
மருத்துவ அலுவலா் பிரிசில்லா பூா்ணிமா தலைமை வகித்தாா். மருத்துவா்கள் பேபி பொன் அருணா, சுஜீதா, சித்த மருத்துவா் தமிழ் அமுதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நிகழ்ச்சியில் எய்ட்ஸ் தொற்று பாதிப்புக்குள்ளான நோயாளிகளை இன்முகத்துடன் பாதுகாப்பது, அன்பு செலுத்துவது, மருத்துவ ஆலோசணைகள் மற்றும் சிகிச்சைகளை முழுமையாக பின்பற்ற செய்வது, சமூகத்தில் சக மனிதா்களுடன் இயல்பாக வாழ செய்வது, அரசின் வழங்கும் நலத்திட்ட உதவிகளை பெற்று தருவது குறித்து மருத்துவா்கள் எடுத்துரைத்தனா். தொடா்ந்து எய்ட்ஸ் தடுப்பு விழிப்புணா்வு உறுதிமொழியை அனைவரும் எடுத்துக்கொண்டனா்.
நிகழ்ச்சியில் செவிலிய கண்காணிப்பாளா் ராணி பிரேமா, அலுவலக கண்காணிப்பாளா் பொன்சன் ரொட்ரிகோ, நிா்வாக பிரிவு உதவியாா் முருகன் மற்றும் செவிலியா்கள், மருத்துவ பணியாளா்கள், பொதுமக்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். எய்ட்ஸ் தடுப்பு திட்ட ஒருங்கிணைப்பாளாா் ராம் பிரசாத் நன்றி கூறினாா்.