தூத்துக்குடி

சாத்தான்குளம் நூலகத்தில் உலக தாய்மொழி தினம்

DIN

சாத்தான்குளம் அரசு கிளை  நூலகத்தில் சிகரம் அறக்கட்டளை, வாசகர் வட்டம் சார்பில் உலக தாய்மொழி தினம்  வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. 
விழாவுக்கு வாசகர் வட்டத் தலைவர்  ஓ.சு. நடராஜன் தலைமை வகித்தார். வட்டார மனிதநேய நல்லிணக்கப் பெருமன்றச் செயலர் மகா. பால்துரை, சிகரம் அறக்கட்டளை இயக்குநர் முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
விழாவில், சாத்தான்குளம் அஞ்சல அதிகாரி ஜான், பங்கேற்றுப் பேசினர். இதைத்தொடர்ந்து தாய்மொழி சிறப்பை விளக்கும் துண்டு பிரசுரங்கள் விநியோகம் செய்யப்பட்டன.
இதில், யோகா ஆசிரியை ராஜலெட்சுமி, பிரேம்குமார், கேரனாலிதியா, பிரிதி ,சுஜி, சக்திவேல், நாகராஜன், ராமசந்திரன், மாணவர்கள் கலந்து கொண்டனர். நுலகர் சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

கடலில் ராட்சத அலைகள் எழும் -கடற்கரை செல்லும் மக்களுக்கு எச்சரிக்கை

‘ஒரு வார்த்தை மாறிடுச்சு..’ : கங்கனாவின் பேச்சு குழப்பமான கதை!

கர்நாடகம்: மனைவிக்காக வாக்கு சேகரித்த நடிகர் ஷிவராஜ்குமார்

காயம் காரணமாக தாயகம் திரும்பும் மதீஷா பதிரானா!

SCROLL FOR NEXT