தூத்துக்குடி

பனைமர விதைகள் நடும் பணி

திருச்செந்தூரில் பனைமர விதைகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது.

DIN

திருச்செந்தூரில் பனைமர விதைகள் நடவு செய்யும் பணி நடைபெற்றது.
நிலத்தடி நீரை பாதுகாக்கவும்,  அழிந்துவரும் கருப்பட்டி தொழிலை காப்பாற்றவும், ஏழை, எளிய பெண்கள் வாழ்க்கை திறனை மேம்படுத்தப்பகூடிய பாய்முனைதல், பெட்டிசெய்தல் போன்ற தொழிலை வளர்க்கவும்,  பதனீர் உற்பத்தியை ஊக்குவிக்கவும், பனைமரங்கள் அழிக்கப்படாமல் பாதுகாக்கவும் திருச்செந்தூர் நல்வாழ்வு சமூக சேவை நிறுவனம் சார்பில் திருச்செந்தூர், நத்தக்குளம் வடிகால் பகுதிகளில் நூற்றுக்கும் அதிகமான பனை மர விதைகள் நடவு செய்யப்பட்டன. நிகழ்ச்சியில் நல்வாழ்வு சமூக சேவை நிறுவன நிர்வாக இயக்குநர் கணேசன் தலைமை வகித்தார். வழக்குரைஞர் துரைப்பாண்டியன் முன்னிலை வகித்தார்.   அலுவலர்கள் சுப்புதுரை, இசக்கிபாலன், இசக்கிசெல்வன், சிவநாதன், மாசானமுத்து, நூலகர் மாதவன், சுப்பிரமணியன், காங்கிரஸ் பிரமுகர் சேதுராமன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் விடுதலைச் செழியன், மனோகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 1,45,157 வாக்காளா்கள் நீக்கம்

அரசின் நலத்திட்ட உதவிகள் பெற விவசாயிகள் தனித்துவ அடையாள எண் பதிவு அவசியம்

வைகுண்ட ஏகாதசி: கோட்டை பெருமாள் கோயிலில் பகல்பத்து உற்சவம் தொடக்கம்

திருவள்ளூா் அருகே ரயில்வே மேம்பாலப் பணிகள்: விரைவில் முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர ஆட்சியா் வலியுறுத்தல்

லைட்ஹவுஸ் ஊராட்சியில் மாற்றுத்திறனாளிகுக்கான அங்காடி வளாகம் தொடக்கம்

SCROLL FOR NEXT