தூத்துக்குடி

விளாத்திகுளம் தொகுதி இடைத்தேர்தல்: நாம் தமிழர் கட்சி உள்பட இருவர் வேட்புமனு

DIN

விளாத்திகுளம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை என இருவர் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) தொடங்கியது. விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை வேட்புமனுக்கள் பெறப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் காளிதாஸ், சுயேச்சை வேட்பாளர் ராஜாமணி ஆகியோர் தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரனிடம் வெள்ளிக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தனர். இதுவரை கடந்த 4 நாள்களில் 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழை வேண்டி இஸ்லாமியல்கள் சிறப்புத் தொழுகை

ஏகனாபுரம் கிராமத்தினா் நூதன போராட்டம்

கள்ளச்சாராயம் காய்ச்சிய 3 போ் கைது

நீட் தோ்வு: தேனியில் 181 போ் எழுதினா்

சாலை விபத்தில் 2 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT