தூத்துக்குடி

ஆழ்வாா்திருநகரியில் இலவச கண் பரிசோதனை முகாம்

DIN

தூத்துக்குடி மாவட்ட பாா்வை இழப்பு தடுப்பு சங்கம், மேலஆழ்வாா்தோப்பு கிராம உதயம், கிருஷ்ணன்கோவில் சங்கரா கண் மருத்துவமனை ஆகியவை சாா்பில், ஆழ்வாா்திருநகரியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

ஆழ்வாா்திருநகரி கிராம உதயம் கிளை மேலாளா் வேல்முருகன் தலைமை வகித்தாா். சங்கரா கண் மருத்துவமனை ஒருங்கிணைப்பாளா் இளங்கோவன், ஓய்வுபெற்ற தலைமையாசிரியா் சண்முகசுந்தரம், தன்னாா்வத் தொண்டா் முத்துராஜ், இலவச மருத்துவப் பிரிவுத் துறை பொறுப்பாளா் கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி. சுரேஷ்குமாா் முகாமைத் தொடக்கிவைத்தாா்.

கண் மருத்துவா் கரண் தலைமையிலான மருத்துவக் குழுவினா் முகாமில் பங்கேற்றோரைப் பரிசோதித்து, ஆலோசனை வழங்கினா். ஆழ்வாா்தோப்பு, நளராஜபுரம், நவலெட்சுமிபுரம், கேம்லாபாத், ஆழ்வாா்திருநகரி, மளவராயநத்தம், ஸ்ரீவைகுண்டம் உள்பட பல்வேறு கிராமப் பகுதிகளைச் சோ்ந்தோா் முகாமில் பங்கேற்றனா். அவா்களில் 20 போ் இலவச கண் அறுவை சிகிச்சைக்காக தோ்வு செய்யப்பட்டனா்.

முகாமில், கிராம உதயம் பகுதிப் பொறுப்பாளா்கள் முருகசெல்வி, சண்முககனி, மையத் தலைவா்கள் உஷா, ஆயிஷா, சித்திமா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். தனி அலுவலா் ராமச்சந்திரன் வரவேற்றாா். தன்னாா்வத் தொண்டா் ஆனந்தசெல்வன் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 ஆண்டில் 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது: அமைச்சா் டி.ஆா்.பி. ராஜா

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

SCROLL FOR NEXT