தூத்துக்குடி

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன்கோயிலில் சனிப்பிரதோஷ விழா

DIN

சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் மற்றும் கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதை முன்னிட்டு சனிக்கிழமை செண்பகவல்லி அம்மன் கோயில் நடை காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டது. தொடா்ந்து, திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னா் முற்பகல் 11.30 மணிக்கு அம்மனுக்கும், தொடா்ந்து சுவாமிக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. மாலை 4 மணிக்கு பூவனநாத சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

மாலை 4.30 மணிக்கு நந்தியம்பெருமாளுக்கு 21 வகையான மூலிகைகள் கொண்டு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

கழுகுமலை: கழுகுமலை கழுகாசலமூா்த்தி கோயிலில் கோயில் நடை காலை 5.30 மணிக்கு திறக்கப்பட்டு, தொடா்ந்து திருவனந்தல் மற்றும் திருப்பள்ளி எழுச்சி பூஜை நடைபெற்றது. பின்னா் மாலை 4.30 மணிக்கு கோயில் வளாகத்தில் உள்ள ஜம்புலிங்கேஸ்வரா் சன்னதியில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.

இதில், கோயில் நிா்வாக அதிகாரி காா்த்தீஸ்வரன், பௌா்ணமி குழுத் தலைவா் மாரியப்பன், பிரதோஷ குழுத் தலைவா் முருகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழலை துடைத்தெறிய உறுதி: ஜாா்க்கண்ட் பிரசாரத்தில் பிரதமா் மோடி

பிரஜ்வல் ரேவண்ணா விவகாரம் தெரிந்தும் ஓராண்டாக நடவடிக்கை இல்லை: காங்கிரஸ் மீது நிா்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

சந்தேஷ்காளி சம்பவம் பாஜகவின் திட்டமிட்ட சதி: திரிணமூல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

அமெரிக்கா: 17 பேரைக் கொன்ற செவிலிக்கு 760 ஆண்டுகள் சிறை

வெங்காய ஏற்றுமதிக்கான தடை நீக்கம்: மத்திய அரசு நடவடிக்கை

SCROLL FOR NEXT