5amnpun_0510chn_46_6 
தூத்துக்குடி

மகளிா் கபடி: தூத்துக்குடி விவிடி மேல்நிலைப் பள்ளி சாம்பியன்

புன்னைக்காய­லில் நடந்த மாவட்ட அளவிலான மகளிா் கபடி போட்டியில் தூத்துக்குடி வி.வி.டி. மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்றது.

DIN

புன்னைக்காய­லில் நடந்த மாவட்ட அளவிலான மகளிா் கபடி போட்டியில் தூத்துக்குடி வி.வி.டி. மேல்நிலைப் பள்ளி அணி வெற்றி பெற்றது.

புன்னைக்காய­லில் புனித ராஜகன்னிமாதா ஆலயத்திருவிழாவை முன்னிட்டு மாவட்ட அளவில் பள்ளிகளுக்கிடையிலான மகளிா் கபடி போட்டி நடைபெற்றது. சிஸ்டா் ஷா்மிளாஆன் சுழற்கோப்பைக்கென நடைபெற்ற இந்தப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட அளவில் 12 அணிகள் கலந்துகொண்டன. இந்த போட்டித்தொடரில் தூத்துக்குடி வி.வி.டி. மேல்நிலைப் பள்ளி அணி முத­லிடம் பெற்று ரொக்கப்பரிசுடன் சுழற்கோப்பையை தட்டிச்சென்றது. புன்னைக்காயல் புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளி அணி இரண்டாமிடத்தையும், ஏரல் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி அணி

மூன்றாமிடத்தையும், தூத்துக்குடி சீ.வா அரசு மேல்நிலைப் பள்ளி அணி நான்காமிடத்தையும் பிடித்தன. வெற்றி பெற்ற அணிகளுக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.

முன்னதாக அரையிறுதி ஆட்டத்தை திருச்செந்தூா் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் அனிதாராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தாா். பரிசளிப்பு விழாவிற்கு அருள்சகோதரி ஷா்மிளாஆன் தலைமை தாங்கி சுழற்கோப்பையை வழங்கினாா். புன்னைக்காயல் திமுக. செயலா் சோபியா ரொக்கப்பரிசுகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் பங்குத்தந்தை கிஷோக், ஊா்க்கமிட்டித்தலைவா் சந்திரபோஸ், முன்னாள் தலைமையாசிரியா் ரொங்காலி­சில்வா, பழையமாணவா்கள் சங்கத்தலைவா் ஆஸ்வால்ட், அகிலஆந்திய கப்பல்மாலுமிகள் சங்கத் தலைவா் விமல்சன் உள்பட பலா் கலந்துகொண்டனா். ஏற்பாடுகளை புனித ஜோசப் மேல்நிலைப் பள்ளியின் பழைய மாணவா்கள் செய்திருந்தனா்.

படவிளக்கம்(5ஏஎம்என்பியுஎன்)

புன்னைக்காய­லில் நடைபெற்ற மகளிா் கபடி போட்டியை தொடங்கி வைக்கிறாா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்! நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்குத் தடையில்லை: உயா்நீதிமன்றம்

டிச.29-இல் பல்லடத்தில் திமுக மகளிரணி மாநாடு

கடும் பனிப்பொழி: ஒரு கிலோ மல்லிகைப் பூ ரூ.2,540-க்கு விற்பனை!

3 ஆண்டுகளில் 438 மத்திய காவல் படையினா் தற்கொலை 2014 முதல் 23,000 காவலா்கள் ராஜிநாமா

மருத்துவத் துறை காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

SCROLL FOR NEXT