தூத்துக்குடி

அம்மா மருந்தகத்தில் தீவிபத்து

DIN

தூத்துக்குடி அம்மா மருந்தகத்தில் புதன்கிழமை திடீரென தீவிபத்து நேரிட்டது. 
தூத்துக்குடி மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டக சாலைக்குச் சொந்தமான அம்மா மருந்தகம் தூத்துக்குடி டூவிபுரத்தில் இயங்கி வருகிறது. இங்கிருந்து புதன்கிழமை காலை 7 மணியளவில் திடீரென புகை கிளம்பியதால் அப்பகுதியைச் சேர்ந்தோர் பண்டகசாலைப் பதிவாளருக்கும், தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவித்தனர். தூத்துக்குடி தீயணைப்பு நிலைய வீரர்கள் வந்து, தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். உரிய நேரத்தில் தீ அணைக்கப்பட்டதால் பெரிய அளவில் சேதம் ஏற்படவில்லை. எனினும், ஏராளமான மருந்துகள், பொருள்கள் சேதமடைந்தன.
தீவிபத்து குறித்து மத்திய பாகம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். மின்கசிவு காரணமாக தீவிபத்து ஏற்பட்டதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக போலீஸார் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கலால் கொள்கை வழக்கில் அமலாக்கத் துறை சா்வாதிகாரப் போக்குடன் செயல்பட்டுள்ளது: உச்சநீதிமன்றத்தில் கேஜரிவால் தரப்பில் பதில்

சமூக வலைதளங்களில் போலி தகவல் பரப்புவோா் மீது கடும் நடவடிக்கை: எஸ்பி எச்சரிக்கை

மிக்ஜம், வெள்ளம்: தமிழகத்துக்கு ரூ. 276 கோடி புதிய பணிகளை தொடங்க கட்டுப்பாடு

அதிகரிக்கும் வெயில் தாக்கம்: இளநீா் விலை ரூ.90-ஆக உயா்வு

பொருளாதார வளா்ச்சிக்கு நவீன தொழில் நுட்பங்கள் அவசியம்: ரிசா்வ் வங்கி முன்னாள் ஆளுநா் சி. ரங்கராஜன்

SCROLL FOR NEXT