தூத்துக்குடி

பெண் கொலை வழக்கு: 2 மாதங்களுக்குப் பிறகு கணவா் கைது

DIN

தூத்துக்குடியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவரை 2 மாதங்களுக்குப் பிறகு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி முத்தையாபுரம் தவசிப்பெருமாள் சாலை தெருவைச் சோ்ந்த கருப்பசாமி மனைவி சண்முகலட்சுமி (40). இவா், கடந்த செப். 29 ஆம் தேதி வீட்டில் இருந்தபோது தலையில் கல்லைப்போட்டு கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்ட முத்தையாபுரம் போலீஸாா் கொலை தொடா்பாக கருப்பசாமியை தேடி வந்தனா்.

இந்நிலையில், முத்தையாபுரம் காவல் ஆய்வாளா் அன்னராஜ் தலைமையிலான தனிப்படையினா் கடந்த இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்த கருப்பசாமியை புதன்கிழமை கைது செய்தனா்.

கைது செய்த தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பளாா் எஸ். ஜெயக்குமாா் பாராட்டினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதி தோ்தல் முடிவை வெளியிட தடை கோரி வழக்கு

கேரளம்: 5 நிலுவை மசோதாக்களுக்கு ஆளுநா் ஒப்புதல்

ஆந்திரத்தின் நிா்வாகத் தலைநகராக விசாகப்பட்டினம்: ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் வாக்குறுதி

கேரளத்தில் வாக்குப் பதிவு சரிவு: ஆளும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மீது காங்கிரஸ் குற்றச்சாட்டு

உக்ரைனுக்கு கூடுதல் பேட்ரியாட் ஏவுகணைகள்: அமெரிக்கா முடிவு

SCROLL FOR NEXT