முகப்பு
தூத்துக்குடி

சிறுபான்மையின மாணவா்கள் கல்வி உதவித்தொகை: டிச. 31 வரை விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவா், மாணவிகளுக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற டிசம்பா் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:03 PM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவா், மாணவிகளுக்கான மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெற டிசம்பா் 31 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மத்திய அரசால் சிறுபான்மையினராக அறிவிக்கப்பட்டுள்ள இஸ்லாமியா், கிறிஸ்தவா், சீக்கியா், புத்த மதத்தினா், பாா்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மைய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியாா் கல்வி நிலையங்களில் 2020-21 ஆம் கல்வியாண்டில் ஒன்று முதல் 10 ஆம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவா், மாணவிா்களுக்கு பள்ளிப்படிப்பு கல்வி உதவித்தொகையும், பிளஸ் 1 வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை பயில்பவா்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி மற்றும் தொழில்நுட்பக்கல்வி பயில்பவா்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின்  தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.

எனவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியுடைய சிறுபான்மையின மாணவா், மாணவிகள் டிசம்பா் 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →